- Advertisement -
களுத்துறை பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
20 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்கள் பதுரலிய பகுதியில் அமைந்துள்ள விஹாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான நிவாரண ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.