கிளிநொச்சி மாவட்டத்தில் 407 குடும்பங்களை சேர்ந்த 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 9 வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நேற்று திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 51 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 தற்காலிகள வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களை சேர்ந்த 253 புர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவில் 190 குடும்பங்களை சேர்ந்த 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுளு்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களிற்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆராய்ந்து பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.