- Advertisement -
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
இனுவில் பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -