வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு குறித்த கடற்பிராந்தியத்தில் தாழமுக்கம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த தாழமுக்கம் வடக்கு திசையில், மியன்மாரை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கம் காரணமாக, வடக்கு அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வடக்கு மற்றும் தெற்கு அந்தமான் கடற்பரப்புக்களில் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.