நெடுந்தீவு பிரதேசத்தில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த இருவரையும் தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமல் போன 40 வதான மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.