நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 732 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 842 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், 4 ஆயிரத்து 225 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 617 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 517 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.