பிரேசிலில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 679 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பிரேசிலில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்றைய நாளின் இதுவரையான காலப்பகுதியில் 26 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 51 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களுள் எண்ணாயிரத்து 318 பேர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதா பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.