ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், சப்பிரகமுவ மாகாணத்தில் சில இடங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், மத்திய, சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.