வடக்கு மாகாணத்தில் இன்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் எனவும் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பெண்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்கள் இருவரும் பணியாற்றும் வர்த்தக நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாள்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.
அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு இன்று பரிசோதனைக்கு உள்படுத்திய போது கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 60 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.