நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 354 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 583 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டின் 63 சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 589 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 480 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 747 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 741 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.