நாட்டின் பல்வேறு பகுதிகளில், இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.