- Advertisement -
விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் குருநகர் பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வாரமும் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஹேரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -