கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், பஸ் முந்துரிமை ஒழுங்கை சட்டத்தை (BUS LANE) மீள நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பஸ் முந்துரிமை ஒழுங்கை சட்டம் பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் முதல் கட்டமாக பொரளை, புஞ்சி பொரளை மருதானை, ரெக்னிகல் சந்தி மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் பஸ் முந்துரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, காலை 6 மணி முதல் 9 மணிவரையிலான காலப்பகுதியிலே இவ்வாறு பஸ் முந்துரிமை சட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமுல்படுத்தும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் பஸ் முந்துரிமை ஒழுங்கை சட்டத்தை மீள சட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.