மனித உரிமைகளை பாதுகாத்த சிறந்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மனித உரிமைகளை பாதுகாத்து, பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்தது.
யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர அவர்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார்.
இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது.
அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர்.
இதன்போது பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீர அவர்களின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பன காரணமாக அமைந்ததை மறுக்க முடியாது” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.