திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அட்டன் நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை கொட்டகலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை கொட்டகல பொரிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.