நாட்டின் தென்மேற்கு திசையில் தொடர்ந்தும் நிலவிவரும் மழையுடனான வானிலை எதிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் எனவும், அவ்வாறான சந்தர்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.