முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 5 ஆயிரத்து 240 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 11 ஆயிரத்து 709 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக ராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதையடுத்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான முப்படையினரின் 416 உறுப்பினர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.