சீனாவில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்கலாக 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் தெற்கிலுள்ள குவாங்ஸி பிராந்தியத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலைக்குள் கத்தியுடன் நுழைந்த 50 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அங்கிருந்தவர்களை குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன், கத்திக்குத்தை மேற்கொண்ட குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.