நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 67 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு குணமடைந்தவர்களில் 41 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 857 ஆக காணப்படுகின்றது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 41 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 789 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.