மெக்ஸிகோவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 409 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், மெக்ஸிகோவில் 257 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த 28 ஆயிரத்து 475 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.