இலங்கையிலும் உலகெங்கிலும் புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான ரமழான் நோன்பு தூய்மையான வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம்கொடுத்துள்ள இதுபோன்றதொரு காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக் கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே ஒரு சில தீவிரவாதிகளின் நடத்தைகளினால் சகோதரத்துவம் பாதிப்படைவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தீவிரவாதம் இஸ்லாத்தின் அடிப்படைப் பெறுமானங்களுக்கு எதிரானது என்பது உண்மையான இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும் எனவும், எனவே, நம்பிக்கையீனம், சந்தேகங்களை கலைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.