கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்த மருத்துவ பரிசோதனைக்கு வருகைத் தருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பரிசோதனை நிலையங்களுக்கு வருகைத் தருமாறு குறித்த சங்கத்தின் தலைவர் நயனி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.