நாட்டில் கொரோனாவின் தாக்கம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுகாதார அமைச்சு கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியுள்ளன.
இதற்கமைய, காய்ச்சல், இரத்தப் போக்கு,கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு அல்லது வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல் மற்றும் உடலில் வீக்கம் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைகளை நாடுமாறு சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், தரமான சேவையை வழங்கவும், வைத்தியசாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், முற்பதிவுகளை பெறுமாறும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கோரியுள்ளார்.