யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்றையதினம் 666 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தனியின் மொத்த எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.