கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்றைய நாளில் மாத்திரம், இது வரையான காலப்பகுதியில் 18 ஆயிரத்து 375 பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 20 இலட்சத்து 7 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரை, 1 இலட்சத்து 12 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 7 இலட்சத்து 58 ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய நாளில் மாத்திரம், இது வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 472 பேர் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 70 இலட்சத்து 81 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை, 4 இலட்சத்து 5 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 34 இலட்சத்து 53 ஆயிரத்து 648 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.