கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குடும்பத்தகராறு காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.