ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 157 பயணிகளுடன் பயணித்துள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ எல் – 454 விமானம் நேற்று இரவு 7.20 அளவில் ஜப்பானின் நரிட்டா விமான நிலையம் நோக்கி பயணித்துள்ளது
மாலைத்தீவில் இருந்து நேற்று தினம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 16 ஜப்பானியர்களும் இதில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு ஜப்பானுக்கு பயணித்தவர்கள் 10 பேர் வர்த்தக வகுப்பிலும் ஏனைய 147 பேர் சாதார வகுப்பிலும் பயணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.