உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்ப்ட்டி பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் காப்பாளரே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் இருவரை அழைத்துவந்து குழுவொன்றுக்கு அடிப்படைவாத பிரச்சாரங்கள் மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தொண்டு நிறுவனம் என்ற பெயரில் குறித்த சந்தேகநபரால் ஆயுதப் பயிற்சி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரங்குளி அசார் நகர் பகுதியில் தொண்டு அமைப்பினால் நடத்திச் செல்லப்பட்ட குறித்த அமைப்பின் அலுவலகத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று சுற்றி வளைத்துள்ளனர்