லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு இரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்… தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Olikkum per ondru arangame adhira vaikum! 😉
Thadukkum kaalam thaandi adhu paravi nirkum! 🔥
Nanba, massive release update tomorrow at 12.30pm. Get ready! 😎#MasterUpdate #Master pic.twitter.com/IzADAJJOUF
— XB Film Creators (@XBFilmCreators) December 28, 2020