முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான Sayyeshaa விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Boyapati Srinu இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் Hyderabad இல் ஆரம்பிக்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.
இது இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட கதை என்பதால், இப்படக்குழு , பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தியது.
முதலில் ‘பிசாசு’ படத்தில் நாயகியாக நடித்த Prayaga Martin ஒப்பந்தமானார்.
ஆனால், திகதிப் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து அவர் விலகவே, Sayyeshaa ஒப்பந்தமானார்.
இதனை Boyapati Srinu தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது Sayyeshaa வும் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக Pragya Jaiswal ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இன்னொரு நாயகியாக Poorna நடிக்கவுள்ளார்.