தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான சிவகார்த்திகேயனின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லொக்கப் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின.
அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி ஓடிடி யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
இதேவேளையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டொக்டர்’ படத்தையும் ஓடிடி யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.